கட்டுரைகள் (திருமணம்)

திருமணம் பற்றிய சார ஜோதிட கட்டுரைகள்



 புத்தகத்தின் பெயர் : ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்யமும்

நூல் ஆசிரியர் : ஜோதிட நல்லாசிரியர் A. தேவராஜ்             

மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 200/- 

Google pay No : 9445721793

 

                    

ஜாதகத்தில் திருமணமும் தாம்பத்யமும்

   


2. பாவக் கொடுப்பினை அல்லது பாவத் தொடர்பு

ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை நிர்ணயிப்பது அந்த பாவத்தின் உபநட்சத்திர அதிபதி (60% பங்கும்), உப உப நட்சத்திர அதிபதி (25% பங்கும்) நட்சத்திர அதிபதி (15% பங்கும்) போன்ற 3 கிரகங்களாகும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவத்தின் கொடுப்பினையை பெருமளவு நிர்ணயிக்கும் ஆற்றலை அந்த பாவத்தின் உப நட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம் எதுவோ அதுவே பெறும்.

ஒவ்வொரு கிரகமும், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலமாக, தான் செய்ய வேண்டிய பலனை தரும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவ ஆரம்ப முனையின் உபநட்சத்திர அதிபதி (அல்லது உப உப நட்சத்திர அதிபதி அல்லது நட்சத்திர அதிபதி), தான் இருக்கும் நட்சத்திர, உபநட்சத்திர அதிபதிகள் மூலம் வேறு சில பாவமுனைகளைத் தொடர்பு கொண்டு தன்னுடைய பாவத்திற்கு நன்மையையோ அல்லது தீமையையோ அல்லது நடுநிலையான பலனையோ தரும். இது குறிப்பிட்ட அந்த பாவத்தின் விதி அல்லது கொடுப்பினை என அழைக்கப்படுகின்றது.

மேற்கண்ட நிலையை தான் ஒரு குறிப்பிட்ட பாவம் வேறு சில பாவங்களை தொடர்பு கொள்கின்றது என்றும், இதை பாவத்தொடர்பு என்றும் கூறுகின்றோம்.

எனவே இனி வரும் கட்டுரைகளில் பாவம் என்றாலே பாவமுனை என பொருள் கொள்ளவும். பாவமுனை என்பது பாவ நட்சத்திரம், பாவ உபநட்சத்திரம், பாவ உப உப நட்சத்திரம் என்ற மூன்று கிரகங்களை கொண்டது. இதில் பாவ உபநட்சத்திரமே வலிமையானது என்பதால், பாவம் என்றாலே பாவ உபநட்சத்திரம் என்றும், பாவத் தொடர்பு என்றால் பாவ உப நட்சத்திரத்தின் தொடர்பு என்றும் வாசகர்கள் பொருள் கொள்ளவும்.

அதாவது ஒவ்வொரு கிரகமும் தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் எதுவோ அதுவாகவே மாறுகின்றது. அதன்படி ஒரு கிரகம், தன்னுடைய பாவ பலனை விட தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திர அதிபதிகள் தொடர்பு கொண்ட பாவங்களின் பலன்களைத் தான் செய்யும்.

அப்படி அந்த பாவங்களின் பலன்களை செய்யும் போது, மேற்கண்ட பாவங்கள் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட கிரகம் வைத்திருக்கும் பாவத்திற்கு சாதகமான பாவங்களாக இருக்கும் பட்சத்தில், தனது பாவ பலனை தக்க வைத்து கொண்டு, தனது நட்சத்திர, உப நட்சத்திர அதிபதிகளின் பாவ பலன்களை செய்யும்.

அதன்படி ஒரு குறிப்பிட்ட பாவம் மற்ற பாவங்களைத் தொடர்பு கொள்ளும் போது, தனது பாவத்திலிருந்து தொடர்பு கொண்ட பாவங்கள் எத்தனையாவது பாவமோ அதை பொறுத்து, தனது பாவ பலனை நிர்ணயிக்கும்.

அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட பாவம், தனது பாவத்திலிருந்து பின்வரும் பாவங்களைத் தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளை இங்கு தருகின்றேன்.

1) ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தனது பாவத்தையே தொடர்பு கொண்டால், தனது பலனை எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே செய்யும்.

அதாவது ஒரு கிரகம், தனது சொந்த நட்சத்திரம், உபநட்சத்திரம், உப உப நட்சத்திரத்தில் இருந்தால் தனது பலனை எப்படி செய்ய வேண்டுமோ அப்படியே செய்யும்.

2) ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம், தனது பாவத்திற்கு 2ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை சராசரி அளவை விட சற்று கூடுதலாக மட்டும் வளர்ந்து அதற்கு மேல் வளராமல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ளும்.

3) ஒரு குறிப்பிட்ட பாவம்தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்தனது பாவத்திற்கு 3ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை, மிக அதிகளவில் பல மடங்கு வளர்த்து விடும். மேலும் தனது பாவத்தை அடுத்த பரிமாணத்திற்கும் எடுத்து செல்லும்.

4) ஒரு குறிப்பிட்ட பாவம்தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்,   தனது பாவத்திற்கு 4ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் இடையிலேயே பலமிழந்து விடும்குறிப்பாக தனது பாவத்தை 30% வரை (3ல் ஒரு பங்கு மட்டும்) மட்டுமே செயல்படுத்தி, பிறகு தனது  பாவத்தை தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் தனது பலத்தை இழந்து விடுகின்றது.

5) ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்தனது பாவத்திற்கு 5ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களை எந்த வித சிரமமும் இல்லாமல் எப்படி இயக்க வேண்டுமோ அப்படி இயக்கும்.

6) ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்தனது பாவத்திற்கு 6ம் பாவத்தை தொடர்பு கொண்டால், மற்றவர்களை வீழ்த்தி அல்லது போராடி தனது பாவத்தை செயல்படுத்தும்.

7) ஒரு குறிப்பிட்ட பாவம், தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம், தனது பாவத்திற்கு 7ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தை ஒரு கட்டுப்பாட்டுடன் அல்லது நடுநிலையுடன் செயல்படுத்தும். மேலே குறிப்பிட்ட பாவம் அகச்சார்புடைய பாவம் எனில் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் தனது பாவத்தை செயல்படுத்தி விடும்.

8) ஒரு  குறிப்பிட்ட பாவம்தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்தனது பாவத்திற்கு 8ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களை எப்படி செயல்படுத்த வேண்டுமோ அப்படி செயல்படுத்தாமல், தனது பாவத்திற்கு எதிரான நிலையில் அல்லது எதிர்பாராத கெட்ட நிலையில் செயல்படுத்தி விடும்.

9) ஒரு  குறிப்பிட்ட பாவம்தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம்தனது பாவத்திற்கு 9ம் பாவத்தை தொடர்பு கொண்டால், தனது பாவத்தின் காரகங்களுக்கு ஜாதகர் குறிப்பிடும் அளவுக்கு முயற்சி செய்யாமல் இருந்தாலும் கூட, தானாகவே அது ஜாதகரை தேடி வரும். மேலும் மேலே குறிப்பிட்ட பாவத்தை ஜாதகர் எப்படி செயல்படுத்த நினைத்தாரோ (அனுமானம்) அதன்படியே செயல்படுத்துவார்.

 

3. 7&ம் பாவத்தின் மற்ற பாவத் தொடர்புகள்

பின்வரும் பாவங்களை அல்லது பாவமுனைகளை 7ம் பாவம் அதாவது 7ம் பாவமுனை தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளைத் தொகுத்து  தந்துள்ளேன்.

7ம் பாவத்தின், 1ம் பாவத் தொடர்பு:

பாவமுனைகளில் பாவ உபநட்சத்திரமே வலிமையானது என்பதால் இங்கு 7ம் பாவம் என்பது, 7ம் பாவ முனையின் உப நட்சத்திர அதிபதி ஆகும். 1ம் பாவம் என்பது லக்ன பாவ முனையின் நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் போன்றவற்றை குறிக்கும்.

ஜாதகருக்கு தனது வாழ்க்கைத் துணை மூலம் கௌரவம் கிடைக்கும். அதே நேரத்தில் ஜாதகரின் வாழ்க்கை துணை மூலம் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு பொருளாதார முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கை துணை தன்னை முழுமையாக ஜாதகரிடம் அர்ப்பணித்து விடுவார். அதாவது தனது சுக துக்கங்களை ஜாதகருடன் முழுவதுமாக பகிர்ந்து கொள்வார்.

வாழ்க்கைத் துணை ஜாதகரை சார்ந்து நன்கு வாழ்வார். வாழ்க்கைத் துணைக்கு, திருமண வாழ்க்கை மூலம் நல்ல சமூக அங்கீகாரம் கிடைக்கும். அதாவது வாழ்க்கைத் துணைக்கு இந்த திருமணத்தினால் மற்றவர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை ஏற்படும். வாழ்க்கைத் துணை எப்போதும் ஜாதகரை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்.

இங்கு லக்ன பாவம் என்பது 7ம் பாவத்திற்கு 7ம் பாவம் (சம விளைவு) என்பதால் ஜாதகர் தன்னுடைய தகுதிக்கேற்ப யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவரே வாழ்க்கை துணையாக ஜாதகருக்கு விதிப்படி அமைவார். மேலும் ஜாதகரை தொடர்பு கொள்ளும் நபர்கள் அனைவரும் ஜாதகரின் தகுதிக்கேற்ற நபர்களாக இருப்பார் என்றும் வாசகர்கள் மேற்கண்ட தொடர்பை புரிந்து கொள்ளலாம்.

(குறிப்பு: 7ம் பாவம் என்பது ஜாதகரின் வாழ்க்கைத் துணையை மட்டுமல்லாமல் ஜாதகரைத் தொடர்பு கொள்ளும் நபர்களையும் குறிக்கும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.)

7ம் பாவத்தின், 2ம் பாவத் தொடர்பு:

ஜாதகருக்கு தன்னுடைய வாழ்க்கைத் துணை மூலம் பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணம் நடைபெறும் காலத்தில் மேற்கண்ட 7ம் பாவமுனையின் உப நட்சத்திர அதிபதி யாரோ அவரே, தசா () புத்தியை நடத்தினால் திருமணத்தின் போது ஜாதகர் நிறைய பொன், பொருட்களைப் பெறுவார் (வரதட்சணை).

ஜாதகரின் வாழ்க்கைத் துணை எப்போதும் விபத்து () வலி, வேதனைகளை அடிக்கடி அனுபவிப்பார். ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை எப்போதும் திட்டி கொண்டே இருப்பார். (அதாவது 2ம் பாவம் என்பது ஜாதகரின் வாக்கு () பேச்சு ஆகும். இந்த 2ம் பாவம், 7ம் பாவத்திற்கு 8ம் பாவமாக அமைவதால் ஜாதகரின் வாழ்க்கை துணைவிக்கு ஜாதகரின் வாக்கால் கௌரவ குறைவு, அவமானம் போன்றவை ஏற்படும்). மேலும் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு ஆயுளும் குறைவாகவே அமையும்.

அதாவது 7ம் பாவத்தின், 2ம் பாவத்தொடர்பு, ஜாதகரின் லக்னத்திற்கு 2ம் பாவமாகவும், 7க்கு 8ம் பாவமாக அமைவதால் ஜாதகருக்கு நல்ல பலனும், வாழ்க்கை துணைக்கு கெட்ட பலனும் நடைபெறும். அதே நேரத்தில் 1, 7ம் பாவ உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருந்து, மேற்கண்ட 1, 7ம் பாவ உபநட்சத்திரத்தின் சாரத்தில் அல்லது உபநட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருந்தால் மனைவியின் ஆயுளுக்கு பிரசச்னைகளைத் தராது.@@

7ம் பாவத்தின், 3ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் திருமணத்திற்குப் பிறகு கூட்டுக் குடும்பத்தினை விட்டுத் தனி குடும்பம் அமைத்து வாழ்வார். அல்லது திருமணத்திற்கு பிறகு உள்ளூரை விட்டு வெளியூரில் வாழ்வார். அடிக்கடி வேலை நிமித்தத்தினாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ வாழ்க்கைத் துணையை பிரிந்து தற்காலிகமாக வாழ்வது.

ஜாதகரின் வாழ்க்கைத் துணை அதிக தெய்வ பக்தி (கிரக காரகம் குரு) அல்லது கள்ளத் தொடர்புகளை (கிரக காரகம் சுக்ரன், செவ்வாய்) பெற்றிருப்பார். 9ம் பாவம் தெய்வீகம், ஆன்மிகம், கள்ளத் தொடர்பு போன்றவற்றை குறிக்கும். இங்கு 7ம் பாவத்தின் 3ம் பாவ தொடர்பு என்பது 7ம் பாவத்திற்கு 9ம் பாவமாக அமையும்.

(குறிப்பு: மேற்கண்ட பலன்களை ஜாதகரின் மற்றும் ஜாதகரின் வாழ்க்கை துணையின் நடைமுறை வாழ்க்கையை கருத்தில் கொண்டே நாம் பலனை நிர்ணயிக்க வேண்டும். கிரகங்களின் காரகங்களை கருத்தில் கொள்ளாமல் அவசரப்பட்டு எதையும் நாம் கூறக்கூடாது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.)

3ம் பாவம், தைரியம், மனோபலம் போன்றவற்றைக் குறிக்கும் என்பதாலவாழ்க்கை துணை மூலம் ஜாதகருக்கு மேற்கண்டவை கிடைக்கும். அதாவது ஜாதகருக்கு அவரின் வாழ்க்கை துணை நல்ல ஆலோசகராக இருப்பார்.@@@

7ம் பாவத்தின், 4ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் வாழ்க்கைத் துணையை திருப்பதிப்படுத்த முடியாத நிலை மற்றும் ஜாதகருக்கு வாழ்க்கைத் துணை கவர்ச்சி (உடல்)யாகத் தோன்ற மாட்டார். திருமண வாழ்க்கையில் குழந்தை பிறப்பிற்கான வாய்ப்பும் குறைவு, ஜாதகருக்கு வாழ்க்கைத் துணையின் மூலம் சொத்து அல்லது வாழ்க்கைத் துணை மூலம் வருமானம் அதிகம் கிடைக்கும். இருவரும் ஒரே வீட்டில் வாழ்வார்கள்.

5ம் பாவம் என்பது காதல், கவர்ச்சி, உடல் உறவு, குழந்தை போன்றவற்றைக் குறிக்கும். இதற்கு 12ம் பாவமான 4ம் பாவம், 5ம் பாவ காரகத்தில் ஜாதகருக்கு உள்ள குறைப்பாட்டைத் தெரிவிக்கும். அதே நேரத்தில் 4ம் பாவம் என்பது ஜாதகரின் 2ம் பாவத்திற்கு  (தனநிலைக்கு) சாதகமான பாவம் என்பதால் வாழ்க்கைத் துணை மூலம் வருமானத்தை ஜாதகர் பெறுவார்.

4ம் பாவம், என்பது ஜாதகரின் அசையும், அசையா சொத்துக்களை குறிக்கும். எனவே 7ம் பாவத்தின் 4ம் பாவத் தொடர்பு வாழ்க்கை துணை மூலம் ஜாதகருக்கு சொத்துக்கள் சேர்வதையும் குறிக்கும்.

வாழ்க்கைத் துணை ஜாதகர் மீது அதிருப்தியுடன் இருப்பார். ஜாதகரின் வாழ்க்கைத் துணை வேலைக்கு செல்பவராக இருப்பார் () ஜாதகரின் வாழ்க்கை துணை கூட்டுக் குடும்பத்தில் ஜாதகருடன் வாழ்வார். இதனால் ஜாதகரும் ஜாதகரின் வாழ்க்கைத் துணையும் தனிமையில் இருக்கும் வாய்ப்புகள் (உல்லாசமாக) குறைவு.

லக்ன உபநட்சத்திர அதிபதி 3ம் பாவத்தை தொடர்பு கொண்டாலோ அல்லது 1, 3ம் பாவ உபநட்சத்திரம் ஒரே கிரகமாக இருந்து, மேற்கண்ட 1, 3ம் பாவ உபநட்சத்திரத்தின் சாரத்தில், உப நட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருந்தாலோ மேற்கண்ட பலனில் சற்று மாறுபாடு வரக்கூடும்.

7ம் பாவத்தின், 5ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையின் மீது மிகுந்த அளவு காதல் கொள்வார். மேலும் ஜாதகர் தனது வாழ்க்கைத் துணைக்கு சற்று அடங்கியே இருப்பார். ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை நன்கு திருப்திப்படுத்துவார். அதே நேரத்தில், வாழ்க்கை துணையின் மூலம் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு பொருளாதாரத்தை பெறப் மாட்டார்.

ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு, ஜாதகரால் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும். திருமண வாழ்க்கை என்பது வாழ்க்கை துணைக்கு மிகவும் திருப்தியாக அமையும். திருமண வாழ்க்கையில் குழந்தைப்பேறு என்பது விரைவில் கிடைக்கும். கணவன் மனைவி இருவரும் உடல் கவர்ச்சியுடன் வாழ்வார்கள்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட பாவம் 5ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால், அந்த பாவத்தின் காரகங்களின் மீது லக்னத்திற்கு (ஜாதகருக்கு) ஒருவித ஈர்ப்பு, கவர்ச்சி, மயக்கம், நேசிப்பு போன்றவை உண்டாகும்.

 அதே போல், ஒரு குறிப்பிட்ட பாவம் 11-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவத்தின் காரகங்களின் மூலம் மகிழ்ச்சி, சந்தோஷம், முழுமையான திருப்தி போன்றவை கிடைக்கும். இங்கு 7-ம் பாவம் 5-ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் போது லக்னத்திற்கு (ஜாதகருக்கு) 5-ம் பாவ காரக பலனும், ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு 11-ம் பாவ காரக பலனும் நடைபெறும்.

7ம் பாவத்தின், 6ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் தன்னுடைய வாழ்க்கைத் துணையை அடக்கி ஆள்வார். திருமணம் சார்ந்த விஷயங்களில் மற்றவர்களின் (குறிப்பாக உறவினர்) கருத்துகளுக்கு ஜாதகர் மதிப்பு தரமாட்டார். ஜாதகர் தனிமைப்படுத்தப்படுவார். ஜாதகருக்கு உறவினர் நெருக்கம் இல்லாதிருக்கும்  அல்லது உறவினர் நெருக்கம் குறையும்.

7ம் பாவம் என்பது பகிர்ந்து கொள்வதை குறிக்கும். 6ம் பாவம் என்பது எதையும் (இன்ப, துன்பம், பொருளாதாரம்) மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளாமல  தானே அனுபவிப்பதை குறிக்கும்.

திருமணம் நடைபெறும் காலத்தில் மேற்கண்ட 7ம் பாவ உப நட்சத்திரத்தின் 6ம் பாவ தொடர்புடன் கூடிய தசா, புத்தி, ஜாதகருக்கு நடைபெற்றால் திருமணம் மூலம் ஜாதகருக்கு கடன், வழக்கு, பிரிவினை போன்றவை உண்டாகும்.

ஜாதகரின் ஆதிக்க மனோபாவத்தால், வாழ்க்கைத் துணை ஜாதகரைப் பிரிய நேரும். இதனால் ஜாதகர் தன்னுடைய வாழ்க்கைத் துணை மீது வழக்குத் தொடுப்பார். வாழ்க்கைத் துணைக்கு ஜாதகரால் நிறைய இழப்புகள் ஏற்படும். தாம்பத்ய வாழ்க்கையில் வாழ்க்கை துணை ஜாதகருக்கு கட்டுப்பட்டே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். ஜாதகர் தனது வாழ்க்கைத் துணை தனக்கு அடிமையாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்று நினைப்பார்.

அதாவது, 6ம் பாவம் என்பது லக்னத்திற்கு (ஜாதகருக்கு) வெற்றி தரும். அதே நேரத்தில் 6ம் பாவம் என்பது 7ம் பாவத்திற்கு (வாழ்க்கை துணைக்கு) 12ம் பாவம் என்பதால் வாழ்க்கைத் துணையின் தோல்வியையும், வாழ்க்கைத் துணை செயல் திறன் இழத்தலையும் குறிக்கும். (12ம் பாவம் என்பது தோல்வி, விரையம், செயல் திறன் இழத்தல் போன்ற காரகங்களைக் கொண்டது.) அதாவது ஜாதகரின் வாழ்க்கை துணை, ஜாதகரை விட தகுதி குறைந்த நபராக இருப்பார். எனவே ஜாதகர் அவர் மீது ஆதிக்கம் செலுத்துவார்.

6ம் பாவம் என்பது லக்னம் என்ற ஜாதகருக்கு நோய்களை தரும் பாவமாகும். 7ம் பாவத்தின் 6ம் பாவத் தொடர்பு என்பது ஜாதகருக்கு அவரது வாழ்க்கைத் துணை மூலம் நோய்கள் வருவதற்கு வாய்ப்பு உண்டு.

பொதுவாக 7ம் பாவம், 6ம் பாவத்துடன் தொடர்பு கொள்ளும் ஜாதக அமைப்பை உடைய நபர்கள் மற்றவர்களை அடக்கி ஆளும் நினைப்புடன் இருப்பார்கள். எனவே, மற்றவர்கள் ஜாதகர் மீது பகைமை உணர்வகளுடன் இருப்பார்கள். இதனால் இவர்களுடன் யாரும் நெருங்கி பழக மாட்டார்கள். ஜாதகர் தனிமை வாழ்க்கையையே வாழ்வார்.

லக்ன உபநட்சத்திர அதிபதி 5ம் பாவத்தை தொடர்பு கொண்டாலோ, அல்லது 1, 5ம் பாவ உபநட்சத்திரமாக ஒரே கிரகம் அமைந்து, மேற்கண்ட கிரகத்தின் நட்சத்திரம், உபநட்சத்திரம் நிறைய கிரகங்கள் இருந்தாலோ மேற்கண்ட பலனில் மாறுபாடு வரக்கூடும்.

7ம் பாவத்தின், 7ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் வாழ்க்கைத் துணையை நன்கு புரிந்து கொண்டு சார்ந்து வாழ்வார். திருமணம் மூலம் ஜாதகருக்கு வெளியுலகத் தொடர்பு, சமூக அங்கீகாரம், சமூக அந்தஸ்து போன்றவை கிடைக்கும். உதாரணமாக, இன்றைய காலக்கட்டத்தில் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே (முன்னுரிமை) குடும்ப அட்டை (ஸிணீtவீஷீஸீ சிணீக்ஷீபீ) போன்ற சமூக அங்கீகாரம் கிடைப்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

மேலும், திருமணம் செய்யாதவர்களை விட திருமணம் செய்தவர்களுக்கு வெளியுலகத்தில் நம்பகத்தன்மை சற்று கூடுகின்றது என்பதையும் வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

அதாவது 7ம்பாவம் என்பது சமூக தொடர்பு, சமூக அந்தஸ்து, வெளியுலக நெருக்கம், எதையும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்வது போன்றவற்றை குறிக்கும். மேலும் 7ம் பாவம் என்பது 8ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் 8ம் பாவத்தின் காரகங்களான நம்பிக்கையின்மை, அவமானம், கௌரவக் குறைவு போன்றவற்றை 7ம் பாவம்  தடுக்கும்.

ஜாதகர், தன்னுடைய சுக, துக்கங்களை முழுவதுமாக தனது வாழக்கை துணையிடம் பகிர்ந்து கொள்வார். ஜாதகர் வாழ்க்கை துணைக்கு தனக்கு நிகரான சம உரிமையை எப்போதும் தருவார். ஜாதகர் எந்த செயலையும் வாழ்க்கை துணையுடன் இணைந்து, கூட்டாக செய்வார். எந்த ஒரு விஷயத்தையும் கூட்டாக செயல்படுத்தும் போது லக்னத்திற்கு தீமையை தரும் 8ம் பாவ காரகங்கள் செயல்படாது.

அதே நேரத்தில் 7ம் பாவத்தின், 7ம் பாவ தொடர்பினால், திருமண வாழ்க்கை மூலம் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கும் கௌரவம் கிடைக்கும். அதாவது 1ம் பாவம் என்பது ஒருவரது சுய கௌரவத்தை குறிக்கும். அதாவது 7ம் பாவத்தின், 7ம் பாவ தொடர்பு 7க்கு (வாழ்க்கை துணைக்கு) லக்னபாவம் என்பதால் மேற்கண்ட பலன்.

7ம் பாவத்தின், 8ம் பாவத் தொடர்பு:

மேற்கண்ட நிலை லக்னம் என்ற ஜாதகருக்கு பாதகமான அமைப்பும், 7ம் பாவம் என்னும் வாழ்க்கை துணை பாதகமற்ற அமைப்பும் கொண்டதாகும்.

ஜாதகருக்கு தனது வாழ்க்கை துணை மூலம் 8ம் பாவத்தின் காரகங்களான கௌரவ குறைவு, அச்சுறுத்தல்கள், தொல்லைகள், ஏமாற்றங்கள், வலி, வேதனை, அவமானங்கள், மனக் கஸ்டங்கள் போன்றவை ஏற்படும். மேலும் மேற்கண்ட காரணங்களால் ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை விட்டு பிரிந்து இரண்டாவது திருமணம் செய்ய முடியாத நிலையும் உண்டாகும்.

அதாவது, ஒரு குறிப்பிட்ட பாவம் தன்னுடைய பாவத்திற்கு 8-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் தன் பாவ பலனை இழந்து விடுகின்றது. அதே நேரத்தில் அந்த குறிப்பிட்ட பாவம், லக்னத்திற்கு 8-ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் அந்த பாவ பலனை லக்னம் என்ற ஜாதகர் நிம்மதியாக அனுபவிக்க முடியாது அல்லது அந்தக் குறிப்பிட்ட பாவம் மூலம் மிகவும் தீமையான பலனையே அனுபவிப்பார் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

லக்ன பாவம், ஜாதகருடைய சிந்தனையையும், அவரது எதிர்பார்ப்பையும் குறிக்கும். லக்னத்திற்கு 8ம் பாவமான 8ம் பாவம், ஜாதகரின் சிந்தனைக்கு அப்பாற்பட்டதையும் அதாவது ஜாதகர் சிந்திக்காததையும் குறிக்கும். இந்த 8ம் பாவம் லக்னத்திற்கு தீய பாவம் என்பதால் ஜாதகர் நினைத்து கூட பார்க்காத கொடுரமான மணவாழ்க்கையை மேற்கண்ட 7ம் பாவத்தின், 8ம் பாவத்தொடர்பு மூலம் ஜாதகர் அனுபவிப்பார்.

மேலும் ஜாதகரின் 2வது திருமணத்தை அல்லது கள்ளத் தொடர்புகளை 9ம் பாவம் குறிக்கும். 8ம் பாவம் என்பது 9ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் பிரச்சனைக்குரிய முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விடுபட்டு 2வது திருமண வாழ்க்கையை ஜாதகரால் அனுபவிக்க முடியாது.

ஒருவேளை ஜாதகத்தில் 9ம் பாவம், லக்னம், களத்திர காரகன் (சுக்ரன் அல்லது செவ்வாய்) போன்றவை 1, 7ம் பாவத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டிருந்தால் 2வது திருமணம்  செய்ய வாய்ப்பு உண்டு. ஆனால், தனது முதல் வாழ்க்கை துணைக்கு நிறைய பணத்தை (ஜீவனாம்சம்) ஜாதகர் தர வேண்டிய சூழல் உண்டாகும். ஏனெனில்¢ 8ம் பாவம் என்பது 7ம் பாவத்திற்கு 2ம் பாவம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

7ம் பாவம், 8ம் பாவத்துடன் கொண்ட தொடர்பினால் லக்னம் என்ற ஜாதகருக்கு தான், பிரச்சனையே தவிர, 7ம் பாவம் என்ற ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு எவ்வித பிரச்சனையும் வராது. (8ம் பாவம் என்பது 7ம் பாவத்திற்கு 2ம் பாவம் என்பதால் ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 2ம் பாவம் அந்த பாவத்திற்கு மத்திம பலனைத் தரும். அந்த வகையில் இங்கு ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு அகச்சார்புடைய விஷயங்களுக்கு மத்திம பலனைத் தரும்.

லக்ன உபநட்சத்திர அதிபதி 7ம் பாவத்தை தொடர்பு கொண்டாலோ அல்லது 1, 7ம் பாவ உபநட்சத்திரமாக ஒரே கிரகம் அமைந்து, மேற்கண்ட கிரகத்தின் நட்சத்திரம், உபநட்சத்திரத்தில் நிறைய கிரகங்கள் இருந்தாலோ மேற்கண்ட பலன்களில் மாறுபாடு வரக்கூடும்.

7ம் பாவத்தின், 9ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை தவிர, மற்ற நபர்களுடனும் கள்ளத் தொடர்பு கொள்வார் அல்லது 2-வது திருமணம் (மனைவி உயிருடன் இருக்கும் போதே) ஜாதகருக்கு அமையும். மேலும் ஜாதகருக்கு தனது வாழ்க்கைத் துணை  மூலம் எவ்வித பொருளாதாரமும் கிடைக்காது.

மேலும், ஜாதகரின் வாழ்க்கைத் துணை ஏதோ சில காரணங்களினால் தற்காலிகமாக ஜாதகரை விட்டுப் பிரிந்து வேறு வீட்டில் வசிப்பதைக் குறிக்கும். பொதுவாக, கள்ளத் தொடர்புகள் பெரும்பாலும் கணவன் மனைவியின் தற்காலிக பிரிவுகளின் போது நடைபெறுகின்றது என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

அதாவது 4ம் பாவம் என்பது ஒருவர் தனது சொந்த இருப்பிடத்தில் (வீட்டில்) இருப்பதை குறிக்கும். 3ம் பாவம் என்பது ஒருவர் தனது சொந்த இருப்பிடத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் தற்காலிகமாக வசிப்பதை குறிக்கும்.  

ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 3ம் பாவம், அந்த பாவத்தை அடுத்த பரிணாமத்திற்கு எடுத்து செல்லும், என்ற வகையில் அந்த பாவத்தை கூடுதலாக வளர்க்க செய்யும். இங்கு 9ம் பாவம் என்பது 7ம் பாவத்திற்கு 3ம் பாவம் என்பதால் மேற்கண்ட பலன் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

7ம் பாவத்தின், 9ம் பாவ தொடர்பு என்பது கள்ளத் தொடர்பு, 2வது திருமணம் என்பது ஒரு பொது விதி மட்டும்.

லக்னம், 5ம் பாவம், களத்திர காரகன் சுக்ரன் அல்லது செவ்வாய் போன்றவற்றில் ஏதேனும் இரண்டு 4ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஜாதகர் கற்பு தன்மையுடன் யாருடனும் கள்ளத்தொடர்பு வைத்துக்கொள்ளாமல் இருப்பார்.

5ம் பாவம், ஜாதகருடைய காதல் உணர்வுகளையும், சபலத் தன்மையையும் குறிக்கும். 5ம் பாவத்திற்கு 12ம் பாவமான 4ம் பாவம், கற்புத்தன்மையைக் குறிக்கும்.

அதேபோல் 9ம் பாவம் எளிதில் உணர்ச்சி வயப்படும் தன்மையை குறிக்கும். லக்னம் என்பது சாதாரணமாக உண்டாகும் உணர்வுகளை குறிக்கும். திரிகோணங்கள் ஒரே மாதிரியான காரகத்தை வைத்திருக்கும் என்ற வகையிலும், திரிகோணங்கள் ஒன்றைவிட ஒன்று வலிமையானது என்ற வகையிலும் 9ம் பாவம் அதிக உணர்வுகளை தூண்டக்கூடிய பாவமாக உள்ளது.

எனவே காதல் உணர்வுகளையும், (5ம் பாவம்) அதைவிட அதிகமான கள்ளக்காதல் உணர்வுகளையும் (9ம் பாவம்), ஒரே நேரத்தில் தடுக்க கூடியது உணர்வுகள் சாராத அறிவை குறிக்கும் 4ம் பாவம் ஆகும். இந்த 4ம் பாவம், 5, 9ம் பாவங்களுக்கு 12, 8ம் பாவமாக அமையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக யூய ரீக[ னூக்ஷி>நஆ]_ 7ம் பாவத்தின் 9ம் பாவத் தொடர்பு, லக்னத்திற்கோ 7ம் பாவத்திற்கோ பாதகமான நிலையில் இல்லை என்பதால், ஜாதகர் கள்ளத்தொடர்பு அல்லது 2வது திருமணம் போன்றவற்றை செய்தாலும், ஜாதகர் (முதல்) மனைவி ஜாதகரை விட்டு பிரியமாட்டார். ஜாதகரை அவமானப்படுத்தவும் மாட்டார். ஜாதகருக்கு தனது சம்மதத்தை தரவும் தயங்க மாட்டார்.

7ம் பாவத்தின், 10ம் பாவத் தொடர்பு:

ஜாதகர் வாழ்க்கைத் துணை மூலம் திருப்தியற்ற வாழ்க்கையை திருமணத்தின் மூலம் அனுபவிப்பார். தனது வாழ்க்கைத் துணையை தனது சொந்த தொழிலுக்கு பயன்படுத்திக் கொள்வார்.

ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உடல் கவர்ச்சி என்பது சற்று குறைந்து காணப்படும். மேலும் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்குப் பொழுதுபோக்கு விஷயங்களில் நாட்டம் குறைந்து காணப்படும்.

11ம் பாவம் என்பது அகச்சார்புடைய விஷயங்களில் ஒருவருக்கு கிடைக்கும் திருப்தியையும், மன மகிழ்ச்சியையும் குறிக்கும். 10ம் பாவம் என்பது மேற்கண்டவற்றுக்கு எதிரான பலனைத் தரும் என்பதால், 7ம் பாவத்தின் 10ம் பாவத் தொடர்பு ஜாதகர் தனது வாழ்க்கைத் துணை மூலம் அகச்சார்புடைய விஷயங்களில் திருப்தியற்ற வாழ்க்கையை அனுபவிப்பதை குறிக்கும்.

அதேபோல் 5ம் பாவம் ஒருவரது உடல் கவர்ச்சி மற்றும் அவருக்கு பொழுதுபோக்கு விஷயத்தில் உள்ள நாட்டத்தை தெரிவிக்கும். இங்கு 7ம் பாவம் 10ம் பாவத்துடன் கொண்ட தொடர்பினால், இது 7க்கு 4ம் பாவமாக மாறுகின்றது. எனவே, ஜாதகர் தனது வாழ்க்கை துணைக்கு சொத்துக்களை தருவதையும் அல்லது அவரின் பெயருக்கு எழுதி வைப்பதையும் குறிக்கும். 4ம் பாவம் என்பது 5ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் ஜாதகரின் வாழ்க்கை துணைக்கு 5ம் பாவ காரகங்கள் (அழகு, உடல் கவர்ச்சி) குறைந்து காணப்படும்.

7ம் பாவத்தின், 11ம் பாவத் தொடர்பு:

ஜாதகருக்கு திருமண வாழ்க்கையில் தனது வாழ்க்கைத் துணை மூலம் அகச்சார்புடைய விஷயங்களில் திருப்தி, மன மகிழ்ச்சி போன்றவை கிடைக்கும்.

ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு உடல் கவர்ச்சி என்பது சற்று கூடுதலாகக் காணப்படும். ஜாதகருடன் இணைந்து பொழுதுபோக்கு, களியாட்டங்கள் மூலம் ஜாதகரை ஜாதகரின் வாழ்க்கைத் துணை திருப்திப்படுத்துவார்.

வாழ்க்கைத் துணை, ஜாதகருக்கு சற்று அடங்கியே அல்லது ஜாதகரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருப்பார்.

இங்கு 7ம் பாவம், 11ம் பாவத்துடன் கொள்ளும் தொடர்பு லக்னத்திற்கு (ஜாதகருக்கு) 11ம் பாவமாக அமைவதால் ஜாதகருக்கு திருப்தி, மகிழ்ச்சி போன்ற பலன்கள் நடைபெறும். அதே நேரத்தில் மேற்கண்ட 11ம் பாவம் 7க்கு (வாழ்க்கை துணைக்கு) 5-ம் பாவம் என்பதால் வாழ்க்கைத் துணை உடல் கவர்ச்சியுடன் இருப்பதைக் குறிக்கும்.

7ம் பாவம், 10ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் என்ன என்ன பலன்கள் ஜாதகருக்கும் அவரின் வாழ்க்கைத் துணைக்கும் நடைபெறுமோ அதற்கு எதிரான பலனை 7ம் பாவம் 11ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் நடைபெறும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

7ம் பாவத்தின், 12ம் பாவத் தொடர்பு:

மேற்கண்ட நிலை லக்னம் என்ற ஜாதகருக்குப் பாதகமான அமைப்பும், 7ம் பாவம் என்னும் வாழ்க்கைத் துணைக்கு மத்திமமான அமைப்பும் கொண்டதாகும்.

ஜாதகரை அவரது வாழ்க்கைத் துணை அடக்கி ஆள்வதையும், ஜாதகரின் இரகசிய நடவடிக்கைகளை அவரின் வாழ்க்கைத் துணை வேவு பார்ப்பதையும், மேற்கண்ட காரணத்தினால் ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை விட்டு நிரந்தரமாக பிரிவதையும் அல்லது மேற்கண்ட காரணத்தினால் வாழ்க்கைத் துணை ஜாதகர் மீது வழக்கு தொடுப்பதையும் (ஜீவனாம்சம் பெற) குறிக்கும்.

குறிப்பாக ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையால் நிறைய இழப்புக்களையும் சந்திப்பார்.

மேலும் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. அல்லது ஆளுமை தன்மை வாழ்க்கைத் துணைக்கு அதிகம் இருக்கும். ஜாதகருக்கு தன் வாழ்க்கைத் துணை மூலம் தாம்பத்ய சுகம் மிகவும் குறைவு. வாழ்க்கைத் துணைக்கு உறவினரிடம் நெருக்கம் குறைந்து காணப்படும்.

12ம் பாவம் என்பது 7க்கு (வாழ்க்கைத் துணைக்கு) 6ம் பாவம் என்பதால், 6ம் பாவத்தின் காரகங்களான வெற்றி, அடக்கியாளுதல், நோய், வழக்கு போன்றவைகளை ஜாதகரின் வாழ்க்கைத் துணை அனுபவிப்பார். 6ம் பாவம், 7க்கு 12ம் பாவம் என்பதால் ஜாதகரும், மற்ற உறவினரும் ஜாதகரின் வாழ்க்கைத் துணையுடன் நெருக்கமாக இருக்க மாட்டார்கள்.

7ம் பாவத்தின், 12ம் பாவ தொடர்பு லக்னத்திற்கு (ஜாதகருக்கு) 12ம் பாவமாகவே வருவதாலும், லக்னத்தின் 5ம் பாவத்திற்கு இந்த 12-ம் பாவம், 8-ம் பாவமாக வருவதாலும் தாம்பத்ய சுகங்கள் (5ம் பாவம் தாம்பத்ய சுகத்தை குறிக்கும்) என்பது ஜாதகருக்கு வாழ்க்கைத் துணை மூலம் முழுத் திருப்திக் கிடைக்காது.

மேற்கண்ட விளக்கங்கள்  7ம் பாவம், குறிப்பிட்ட ஒரு பாவத்துடன் மட்டும் தொடர்பு கொள்ளும் போது ஏற்படும் விளைவுகள் ஆகும். அதிலும் 7ம் பாவம், ஒரு பாவத்துடன் மட்டும் தொடர்பு கொள்ளும் போது மேற்கண்ட விளைவுகள் மட்டும் நிகழ்வதில்லை.

ஜாதகரின் நடைமுறை வாழ்க்கைக்கேற்ப வேறு சில நிகழ்வுகளும் நிகழ்வதற்கு வாய்ப்பு உண்டு. வாசகர்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையுடன் அந்த அந்த பாவங்களின் குறிப்பிட்ட ஒரு சில அடிக்கடி நடைமுறை வாழ்க்கையில் நிகழக்கூடிய ஓரிரு காரகங்களை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.

எனவே மேற்கண்ட தொடர்புகளை 100% அப்படியே எடுத்துக் கொள்ளாமல் வேறு சில கோணங்களிலும் ஜாதகரின் நடைமுறை வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

ஏனெனில், மனித வாழ்க்கை என்பது ஒரு சில குறிப்பிட்ட வரையறைக்குள் கட்டுப்பட்டுள்ளது என நாம் நினைத்து ஜோதிடத்தை பயன்படுத்துவது, இன்றைய காலசூழலில்  உள்ள வாழ்க்கை முறைக்கு சரியான பலனைத் தராது என்பதே எனது தாழ்மையான கருத்து.

உதாரணமாக 7ம் பாவம், 4ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு தனது வாழ்க்கைத் துணை மூலம் சொத்து அல்லது வாழ்க்கைத் துணை வேலைக்கு செல்வது என பல பலன்களை 4ம் பாவ ரீதியாக லக்னத்திற்கும், 7ம் பாவத்திற்கும் (7க்கு 10ம் பாவம்) என காரகங்களை அடுக்கி கொண்டே போகலாம்.

இந்த காரகங்களில் ஜாதகரை சார்ந்தவை மற்றும் ஜாதகரை சாராதவை என லக்ன பாவத்திற்கும், 7ம் பாவத்திற்கும் நாம் பிரிவுகளை ஏற்படுத்தி பலன்களை சரியான முறையில் நிர்ணயம் செய்யலாம்.

இதுவரை 7ம் பாவம் மற்ற பாவங்களுடன் தொடர்பு கொண்டத னால் ஏற்படும் விதியின் விளைவுகளில், அடியேன் அகச்சார்புடைய அதாவது உடல், மனதை சார்ந்த காரகங்களையே பெருமளவு எடுத்து கூறி உள்ளேன்.

திருமண வாழக்கைக்கு அகத்தைச் சார்ந்த பலன்கள் 65% பலனையும், அகத்தைச் சாராத புறத்தைச் சார்ந்த பலன்கள் 35% பலனையும் தரும்.

குறிப்பாக புறச்சார்புடைய பாவங்களின் பலன்கள் ஜாதகரின் நடைமுறை வாழ்க்கையைப் (சூழலை) பொருத்தே அமையும் என்பதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெரும்பாலான ஜாதகங்களில் 7ம் பாவம் ஒன்றுக்கு மேற்பட்ட பாவங்களுடன்தான், தொடர்பு கொண்டிருக்கும். அப்போது 7ம் பாவம் எத்தனை பாவங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றதோ, அத்தனை பாவங்களின் கூட்டு காரகங்களையும் ஜாதகரும் அவரின் வாழ்க்கைத் துணையும் அனுபவிப்பார்கள்.

அந்தவகையில், பெரும்பாலான ஜாதகங்களில் குறிப்பாக தென்னிந்தியாவில் பிறந்தவர்களுக்கு (200 வடக்கு அட்சாம்சம்), ஒரு குறிப்பிட்ட பாவமும் அதன் 7ம் பாவமும் ஒரே கிரகமாக பாவமுனையில் உபநட்சத்திரமாக அமைவதுண்டு.

குறிப்பிட்ட பாவமும், அதன் 7ம் பாவமும் சம சப்தம பாவங்கள் என அழைக்கப்படுகின்றது. அதாவது 1, 7; 2, 8; 3, 9; 4, 10; 5, 11; 6, 12 போன்றவை சமசப்தம பாவங்களாகும்.

ஒரு குறிப்பிட்ட பாவத்திற்கு 7ம் பாவம், அந்த பாவத்தின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் அல்லது அந்த பாவத்திற்கு நடுநிலையான பலனை தரும் என்று எமது முந்தைய நூலானகொடுப்பினையும், தசா புத்திகளும் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளேன்.

அதே நூலில் அகச்சார்புடைய விஷயங்களுக்கு 7ம் பாவம் அந்த பாவங்களில் காரகத்தை கட்டுப்படுத்தாமல் அல்லது நடுநிலையுடன் செயல்படுத்தாமல், அதை வளர்க்கவே செய்யும். அதாவது அகச்சார்புடைய விஷயங்களுக்கு 7ம் பாவம் நன்மையை செய்யும் என்று குறிப்பிட்டுள்ளதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

அதே நேரத்தில் புறச்சார்புடைய விஷயங்களுக்கு அல்லது பொருள் சார்ந்த விஷயங்களுக்கு (இங்கு திருமண வாழ்க்கைக்கு சாதகமற்ற விஷயங்களுக்கு) 7ம் பாவம் நடுநிலையுடன் செயல்படும்.

7ம் பாவம் என்பதே பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் விட்டு கொடுத்தல் என்பதை குறிக்கும். லக்னத்திற்குச் சாதகமான அகச்சார்புடைய விஷயங்களான சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது அது பகிர்ந்து கொண்ட இருவருக்கும், மென்மேலும் மகிழ்ச்சியை கூட்டும். லக்னத்திற்கு சாதகமற்ற புறச்சார்புடைய விஷயங்களான பொருளாதாரத்தை அல்லது மனரீதியான பிரச்சனைகளை பகிர்ந்து கொள்ளும் பொழுது அது ஓரளவிற்கு கட்டுப்படும்.

அந்த வகையில் சம சப்தம பாவங்களான 1, 7; 2, 8; 3, 9; 4, 10; 5, 11; 6, 12 போன்றவை பகிர்ந்து கொள்ளுதல் என்ற அடிப்படையில் லக்னம் என்ற ஜாதகருக்கு என்ன விளைவுகளைத் தருமோ, அதே விளைவுகளை 7ம் பாவம் என்னும் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கும் தரும்.

எனவே 7ம் பாவ முனை, சம சப்தம பாவங்களை தொடர்பு கொள்ளும் போது ஜாதகரும், ஜாதகரின் வாழ்க்கைத் துணையும் ஒரே மாதிரியான பலனை அனுபவிப்பார்கள்.

பின்வரும் சம சப்தம பாவங்களின் ஆரம்ப முனைகளை 7ம் பாவ ஆரம்ப முனையின் உப நட்சத்திர அதிபதி (அல்லது உப உப நட்சத்திர அதிபதி, நட்சத்திர அதிபதி) தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகள் கீழ்கண்டவாறு அமையும்.

7ம் பாவம் 1, 7ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால்:

கணவன், மனைவி இருவரும் சம அந்தஸ்துடன் வாழ்வார்கள். கணவன், மனைவி இருவரும் சரிசமமான தகுதியை பெற்றிருப்பார்கள். அதாவது சம வயது, சம கல்வி, மற்றவர் பார்வைக்கு சரியான உடல்வாகு (உயரம், பருமன், நிறம் போன்றவை) சமமான குடும்ப பின்னணி என்று இருப்பார்கள். எனவே, வெளியுலகத்தில் கணவனுக்கு ஏற்ற மனைவி என்றும் மனைவிக்கு ஏற்ற கணவன் என்றும் மற்றவர்கள் போற்றும் வகையில் உதாரண தம்பதியர்களாக வாழ்வார்கள்.

ஒருவரை ஒருவர் சார்ந்து, விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் சமூக அந்தஸ்துடன் வாழ்வார்கள். இருவரின் சிந்தனையும் ஒரே மாதிரியாக இருக்கும். ஒருவர் மூலம் மற்றவருக்கு கௌரவம் கிடைக்கும்.

அதாவது இங்கு 7ம் பாவத்தின் 1ம் பாவ தொடர்பு திருமணத்தின் மூலம் ஜாதகருக்கு கௌரவம் கிடைப்பதையும், 7ம் பாவத்தின் 7ம் பாவ தொடர்பு ஜாதகருக்கு திருமணத்தின் மூலம் சமூக அந்தஸ்து கிடைப்பதையும் குறிக்கும். மேற்கண்ட இதே விளைவு 7ம் பாவத்திற்கும் (வாழ்க்கை துணைக்கும்) உண்டாகும் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டுகின்றேன்.

7ம் பாவம் 6, 12ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால்:

மண வாழ்க்கையில் ஜாதகரும் அவரின் வாழ்க்கைத் துணையும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துவார்கள். இதனால் நீயா, நானா என போட்டி இவர்களுக்குள் ஏற்படும். மேற்கண்ட காரணங்களினால் ஒருவர் மீது ஒருவர் வழக்குகள் போட்டு, சமூகத்தின் முன் தங்களுடைய உறவுகளை முறித்து கொள்வார்கள்.

லக்னத்திற்கு (ஜாதகருக்கு) 6ம் பாவம் என்பது ஆதிக்க மனப்பான்மையையும், சமூகத்திற்கும் அல்லது ஜாதகரை தொடர்பு கொள்ளும் நபர்களுக்கும் ஜாதகர் கட்டுப்படாததையும் குறிக்கும். அதாவது 6ம் பாவம் 7ம் பாவத்திற்கு 12ம் பாவம் என்பதால் மற்றவரை  தோல்வி அடைய செய்வதிலேயே அல்லது மற்றவர்களை வெற்றி கொள்வதிலேயே, மற்றவர் மீது ஆதிக்கம் செலுத்துவதிலேயே ஜாதகரின் எண்ணம் இருக்கும்.

அதேபோல் 12¢ம் பாவம் என்பது 7ம் பாவத்திற்கு (வாழ்க்கைத் துணைக்கு) 6ம் பாவம் என்பதால் லக்னத்திற்கு சொன்ன அதே பலன் ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கும் பொருந்தும். எனவே ஒருவருக்கொருவர் மற்றவரை அடக்கி ஆள்வதிலேயே சிந்தித்து கொண்டிருப்பார்கள்.

மேலும் லக்னத்திற்கு 6ம் பாவம் ஜாதகரின் ஆரோக்கியக் குறைவையும், 12ம் பாவம் என்பது 7க்கு 6ம் பாவம் என்பதால் வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைவையும் குறிக்கும். 7ம் பாவத்தின் 1, 7ம் பாவத்தொடர்பு கணவன், மனைவி இருவரும் பொருத்தமான தம்பதிகளாகக இருப்பார்கள் என சற்று முன் பார்த்தோம். 1, 7ம் பாவத்திற்கு 12ம் பாவமான, 6, 12ம் பாவத்துடன், 7ம் பாவம் தொடர்பு பெற்றால். கணவன், மனைவி இருவரும் எல்லா வகையிலும் பொருத்தமற்ற தம்பதிகளாக இருப்பார்கள்.

எனவே 7ம் பாவத்தின் 6, 12ம் பாவ தொடர்பு திருமண வாழ்க்கைக்கு சிறப்பான பலனை தராது. இவர்கள் ஒருவருக்கொருவர் பொருத்தமற்ற தம்பதிகளாக இருப்பதால் இவர்களுக்கு விவாகரத்து கிடைப்பதும் மிகவும் எளிது.

மேற்கண்ட நிலையில் உள்ள ஜாதகத்தில் லக்ன பாவம் மற்றும் பெரும்பாலான கிரகங்கள், 5, 11ம் பாவத் தொடர்பினை தாங்கள் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் பெற்றால் கணவன், மனைவி பிரிவினை உண்டாகாது. 6, 12ம் பாவகாரக பலன்கள் சற்று குறையும்.

7ம் பாவம் 5, 11ம் பாவத்துடன் தொடர்பு பெற்றால்:

தம்பதியர் ஒருவருக்கொருவர் நல்ல உடல் கவர்ச்சியுடன், காதல், களியாட்டங்களில் ஈடுபட்டு, மகிழ்ச்சியாக வாழ்வார்கள். வாசகர்கள் 7ம் பாவம் தனித் தனியாக 5, 11ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் ஏற்படும் விளைவுகளையே இதற்கு எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் 5, 11ம் பாவங்கள் 6, 12ம் பாவத்திற்கு 12ம் பாவங்களாக அமைவதால் 6, 12ம் பாவ காரகங்களை முழுவதுமாக 5, 11ம் பாவங்கள் செயல்பட அனுமதிக்காது. 6, 12ம் பாவம் என்பது ஒருவருக்கொருவர் தான் என்ற அகந்தையுடன் மற்றவருக்கு விட்டு கொடுக்காத காரணங்களினால் திருமண வாழ்க்கைக்கு நிரந்தர பிரிவுகள் ஏற்படுகின்றது. இதை 5, 11ம் பாவங்கள் தடுக்கின்றது.

அதனால் 7ம் பாவம், 5, 11ம் பாவத்தைத் தொடர்பு கொண்டால் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து காதல் உணர்வுகளுடன்  சுகமாக நீடித்து வாழ்வார்கள்.

மற்ற எல்லா தொடர்புகளையும் விட 7ம் பாவத்தின் 5, 11ம் பாவத் தொடர்பே திருமண வாழ்க்கையில் தாம்பத்யத்திற்கு மிக உன்னதமான பலனைத் தரும்.

லக்னபாவம் மேற்கண்ட நிலையில் உள்ள ஜாதகத்தில், 4, 10ம் பாவத் தொடர்பினை பெறாமல் இருப்பது, மண வாழ்க்கையில் தாம்பத்ய சுகத்தை நீண்ட காலம் தம்பதியர் அனுபவிப்பார்கள்.

7ம் பாவம் 4, 10ம் பாவத்துடன் தொடர்பு கொண்டால்:

7ம் பாவத்தின் 4, 10ம் பாவத் தொடர்பு 5, 11ம் பாவங்களுக்கு 12ம் பாவம் என்பதால் இதற்கு முன் நாம் பார்த்த 5, 11ம் பாவ காரகத்திற்கு எதிரான பலன்களை ஜாதகர் அனுபவிப்பார். அதாவது தம்பதியர் ஒருவருக்கொருவர் காதலுடன் இருக்க மாட்டார்கள்.

மேலும் 4, 10ம் பாவங்கள் எந்த விதத்திலும் லக்னத்திற்கு (ஜாதகருக்கு) 8, 12ம் பாவங்களாகவோ அல்லது 7ம் பாவத்திற்கு (வாழ்க்கை துணைக்கு) 8, 12ம் பாவங்களாகவோ அமையாத காரணத்தினால் ஜாதகருக்கோ அவரது வாழ்க்கை துணைக்கோ திருமண வாழ்க்கை என்பது பெரிய அளவு பிரச்சனைகளை தரும் வண்ணம் அமையாது.

ஆனால் கணவன், மனைவ¤ இருவரும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் அகவாழ்க்கையை விட ஒருவரை ஒருவர் சாராத புற வாழ்க்கையை அதிகம் வாழ்வார்கள். இங்கு 10ம் பாவம் என்பது புறவாழ்க்கை  மூலம் இருவருக்கும் கிடைக்கும் அந்தஸ்தினை குறிக்கும். 4ம் பாவம் என்பது அகவாழ்க்கையில் குறிப்பாக தாம்பத்ய சுகத்தில் இருவருக்கும் உள்ள அதிருப்தியை குறிக்கும்.

மேலும் 4, 10ம் பாவங்கள், ஜாதகரின் 1, 7ம் பாவத்தின் 2ம் பாவத்திற்கு சாதகமான பாவங்கள் என்பதால் கணவன், மனைவி இருவரும் தங்களது பொருளாதாரத்தினை ஒருவர் மூலம் மற்றவர் உயர்த்திக் கொள்ளுவார்கள். 4, 10ம் பாவங்கள் 1, 7ம் பாவத்திற்கு 4, 10ம் பாவங்களாகவே அமைவதால் ஒருவருக்கொருவர் சொத்து பரிமாற்றம் செய்து கொள்வதையும் (4ம் பாவம்),  இருவரும் வேலைக்கு செல்வதையும் (10ம் பாவம்) குறிக்கும்.

5, 11ம் பாவம் என்பது தம்பதியர் இருவரும் பெறும் தாம்பத்ய சுகங்களையும், குழந்தை பாக்கியத்தையும் குறிக்கும். இதற்கு 12ம் பாவமான 4, 10ம் பாவங்கள் என்பது இருவருக்கும் தாம்பத்யத்தில் உள்ள அதிருப்தியையும், மலட்டுத்தன்மையையும் தெரிவிக்கும்.

எனவே 7ம் பாவம் 4, 10ம் பாவத் தொடர்பினைப் பெற்றுள்ள தம்பதியருக்கு குழந்தை பேறினை நிர்ணயிக்கும் 5, 11ம் பாவங்கள் வலுவுடன¢ இருக்க வேண்டும்.

மேலும் மேற்கண்ட நிலையில் உள்ள ஜாதகத்தில் லக்னபாவம் 3, 9ம் பாவத் தொடர்பினை பெறுவது ஜாதகரின் உடலில் ஆண்மை அல்லது பெண்மைக்கான அமைப்பு அதிகரித்து, வாழ்க்கைத் துணையின் குறைகளை ஈடுசெய்வது குழந்தை பிறப்பிற்கு சிறப்பான பலனை தரும்.

7ம் பாவம் 3, 9ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால்:

3ம் பாவம்--- என்பது ஜாதகரின் மனோநிலையை குறிக்கும். 9ம் பாவம் என்பது ஜாதகரின் நம்பிக்கையை குறிக்கும். 3, 9ம் பாவம் என்பது தம்பதியர் ஒருவர் மீது மற்றவர் கொள்ளும் மன ரீதியான நம்பிக்கையை அதாவது மன ஒற்றுமையை தெரிவிக்கும்.

ஒருவர் உறவினர் சூழ வாழ்வதை அதாவது கூட்டு குடும்பத்தை 4ம் பாவம் தெரிவிக்கும். 4, 10ம் பாவம் என்பது தம்பதியர் இருவரும் தங்களது உறவினர்களையும் தங்களுடன் வைத்து கொண்டு குடும்பம் நடத்துவதை குறிக்கும், அல்லது தங்களுடைய உறவினருக்கு அருகில் வசிப்பதையும் (சொந்த ஊரில்) குறிக்கும்.

4, 10ம் பாவங்களுக்கு, 12ம் பாவமான 3, 9ம் பாவங்கள் திருமணமான உடனே தம்பதியர் தனிக்குடித்தனம் செல்வதை குறிக்கும். 4, 10ம் பாவங்கள் என்பது தம்பதியர் தங்களுக்குள் தாம்பத்திய உறவில் சில கட்டுப்பாடுகளை வைத்திருப்பதை குறிக்கும். (அதாவது சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது மட்டும் என்பது போல்.)

3, 9ம் பாவங்கள் என்பது தாம்பத்ய உறவில் தம்பதியர் எந்த வித கட்டுப்பாடுகளை வைத்திருக்காமல், தாங்கள் நினைத்த மாத்திரத்தில் உறவுகொள்வதையும், குறிப்பாக பகலில் அடிக்கடி உறவு கொள்வதையும், படுக்கை அறை என்றில்லாமல் எந்த இடத்திலும் (வரவேற்பு அறை, சமையல் அறை போன்ற) தங்களின் உறவுகளை வைத்துக் கொள்வார்கள். அதாவது சந்தர்ப்பங்களை தாங்களே உருவாக்கிக் கொள்வார்கள்.

3, 9ம் பாவங்கள், ஒப்பந்தங்களையும், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தலையும் குறிக்கும். எனவே 7ம் பாவத்தின் 3, 9ம் பாவத் தொடர்பு, தம்பதியரின் மன ஒற்றுமையை குறிக்கும். குறிப்பாக உடல் கவர்ச்சியை விட மனக்கவர்ச்சி இருவருக்கும் அதிகமிருந்து அதனால் முதுமையிலும் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

மேலும் 3, 9ம் பாவங்கள் பயணங்களை குறிப்பதால் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக அடிக்கடி சுற்றுலா செல்வதையும் குறிக்கும். இதன் மூலம் தம்பதியரின் மன ஒற்றுமை மேலும் கூடும்.

7ம் பாவம் 2, 8ம் பாவங்களுடன் தொடர்பு கொண்டால்:

3, 9ம் பாவங்கள் தம்பதியர் இருவரின் மனஒற்றுமை அல்லது ஒருவருக்கொருவர் எல்லாவற்றிலும் உடன்பாட்டுடன் இருத்தல் என்றால், இல்லாதிருப்பதையும், ஒருவருக்கொருவர் அடிக்கடி வாக்குவாதம் மூலம் சண்டையிட்டுக் கொள்வதையும் குறிக்கும்.

2ம் பாவம் என்பது ஜாதகரின் வாழ்க்கைத் துணையின் லக்னத்திற்கு (7க்கு) 8ம் பாவமாக வருவதால், இது வாழ்க்கை துணையின் ஆயுளுக்கு பிரச்சனைகளை தரும். அதேபோல் 8ம் பாவம் என்பது ஜாதகர் இரண்டாவது திருமணம் செய்ய முடியாத நிலையையும் குறிக்கும். மேற்கண்ட இதே விளைவு வாழ்க்கை துணைக்கு வரும்.

அதாவது 7ம் பாவத்தின் 2, 8ம் பாவங்களின் தொடர்பு என்பது ஜாதகரோ அல்லது அவரின் வாழ்க்கைத் துணையோ இருவரில் ஒருவரின் மரணத்திற்கு பிறகு மற்றவர் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்வார்.

இங்கு 7ம் பாவம் 2ம் பாவத்தை மட்டும் தொடர்பு கொண்டால், ஜாதகர் தன் வாழ்க்கைத் துணை இறந்தவுடன் மறுமணம் செய்து கொள்வார். ஏனெனில் 2வது திருமணம் என்னும் 9ம் பாவத்திற்கு, 2ம் பாவம் 8, 12ம் பாவமாக வரவில்லை என்பதாலும், 2ம் பாவம் 7க்கு தான் 8ம் பாவமாக வருகின்றதே தவிர லக்னத்திற்கு தீமையான பாவமாக வரவில்லை.

அடுத்து 7ம் பாவம், 8ம் பாவத்தை மட்டும் தொடர்பு கொண்டால் இது 7க்கு எந்தவித பிரச்சனையும் தராமல் லக்னத்திற்கு மட்டும் பிரச்சனையை தருவதால், வாழ்க்கைத் துணையால் ஜாதகருக்கு மரணத்திற்கு இணையான வலி, வேதனைகளோ அல்லது மரணமோ கூட நிகழலாம்.

சம சப்தம பாவங்கள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்தும் என்ற வகையில் 7ம் பாவம், 8ம் பாவத்தை மட்டும் தொடர்பு கொண்டால் ஜாதகருக்கு வரும் பிரச்சனைகளை விட, 7ம் பாவம் 2, 8ம் பாவத்துடன் தொடர்புக் கொண்டால் வரும் பிரச்சனைகள் பெருமளவு தடுக்கப்படும்.

குறிப்பாக 2, 8ம் பாவங்கள் ஒருவருக்கொருவர் பணத்தை பரிமாறிக் கொள்வதை குறிக்கும். எனவே 7ம் பாவத்தின் 2, 8ம் பாவத்தொடர்பு என்பது தம்பதியரிடம் அடிக்கடி பணத்தை பரிமாறிக் கொள்வதிலும் பிரச்சனைகள் வரும்.

2, 8ம் பாவங்கள், 3, 9ம் பாவங்களுக்கு 12ம் பாவங்கள் என்பதால், இருவரும் ஒன்றாக பயணம் செய்யமாட்டார்கள் (சுற்றுலா செல்வது போன்றவற்றில்), தம்பதியர் பயணங்களை விரும்ப மாட்டார்கள்.

இதுவரை 7ம் பாவம், சம சப்தம பாவங்களைத் தொடர்பு கொண்டால் என்ன விளைவுகளை ஜாதகர் அனுபவிப்பார் என பார்த்தோம். அடுத்து  7ம் பாவம், பின்வரும் பாவங்களை தொடர்பு கொண்டால் என்ன மாதிரியான விளைவுகளை ஜாதகர் அனுபவிப்பார் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

7--- 5, 9- & ஜாதகர் தனது வாழ்க்கைத் துணை மீது அதிகமாக காதல் கொள்வார். அதே நேரத்தில் மற்ற நபர்களிடமும் மோகம் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு. (செவ், சுக்ரனின் நிலை பொறுத்து). ஜாதகர் கள்ள உறவுகள் வைத்திருந்தாலும் வாழ்க்கைத் துணை கண்டுகொள்ளமாட்டார். வாழ்க்கைத் துணை மூலம் பொருளாதார ரீதியில் ஜாதகருக்கு எதுவும் கிடைக்காது.

7--- 7, 2- & ஜாதகரின் வாழ்க்கைத் துணை தற்கொலை செய்து கொள்வார் அல்லது வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் குறைவு. வாழ்க்கைத் துணையின் மரணத்திற்கு பிறகு ஜாதகர் 2வது திருமணம் செய்ய எவ்வித தடையும் இருக்காது.

7--- 7, 12- & ஜாதரின் வாழ்க்கைத் துணை நோயாளியாக இருப்பார். வாழ்க்கைத் துணைக்கு ஆயுள் குறைவு. வாழ்க்கைத் துணையின் மரணத்திற்கு பிறகு ஜாதகர் 2வது திருமணம் செய்ய எவ்வித தடையும் இருக்காது.

7--- 6, 9 & ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை (முதல்) விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். முதல் மனைவிக்கு அல்லது கணவருக்கு தனது சொத்தில் பங்கினை ஜாதகர் தரமாட்டார்.

7--- 6, 8 & ஜாதகரின் ஆணவ போக்கால் திருமண வாழ்க்கையில் பிரச்சனை அதிகரித்து கொண்டே போகும். ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையிடமிருந்து விவாகரத்து பெற்றலும் இரண்டாவது திருமணம் செய்ய முடியாது. வாழ்க்கை துணையால் ஜாதகருக்கு கடன் அதிகளவு உண்டாகும்.

7--- 5, 8 & ஜாதகரின் கற்பு சார்ந்த விஷயத்தில் தனது வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை, அவமானங்களை அனுபவிப்பார். குறிப்பாக பெண்களின் ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்பு இருந்தால், அவர்களின் கணவனுக்கு மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். பெண்ணின் பழைய காதலை (இளம் வயது) அல்லது உடல் அழகினை கொண்டே பிரச்சனைகள் வரும்.

7--- 4, 8 & ஜாதகரின் உடல் அழகில் அவரது வாழ்க்கைத் துணை குறை கூறி ஜாதகரை அவமானப்படுத்துவார். ஜாதகருக்கும் அவரது வாழ்க்கைத் துணை மீது கடுமையான வெறுப்பு இருக்கும். ஜாதகருக்கு வாழ்க்கைத் துணை தாம்பத்யம் சிறப்பு இருக்காது. திருமணத்தின் மூலம் உறவினரிடம் பகை உண்டாகும்.

7--- 3, 8 & ஜாதகருக்கு திருமணத்தினால் மனோநிலை பாதிக்கப்படும். திருமணத்தினால் வதந்திகள் உண்டாகும். தனது வாழ்க்கைத் துணை மீது ஜாதகர் (குறிப்பாக பெண்கள் ஜாதகத்தில்) அதிகமாக பயம் கொள்வார். ஜாதகர் வாழ்க்கைத் துணைக்கு 2வது திருமணம் () கள்ளத்தொடர்பு இருந்து அதனால் ஜாதகரை அவர் ஒதுக்கி வைப்பார்.

7--- 1, 8 & திருமண வாழ்க்கை அல்லது வாழ்க்கைத் துணை சரியாக அமையாத காரணத்தினால் ஜாதகர் தற்கொலை செய்து கொள்வார் அல்லது திருமண வாழ்க்கையை சிறிது கூட அனுபவிக்க முடியாமல் தன்னுடைய பொருளாதாரத்தில் (வாழ்க்கை துணையாம்) பெரிய அளவு வீழ்ச்சியை சந்திப்பார்.

7--- 8, 12 & ஜாதகருக்கு நம்பிக்கையற்ற மற்றும் அதிக பிரச்சனைகளை தருபவர் வாழ்க்கைத் துணையாக அமைவார். 2வது திருமணமும் செய்ய முடியாத சூழல் உண்டாகும்.

7--- 2, 6 & ஜாதகருக்கு தனது வாழ்க்கைத் துணை மூலம் தனலாபம் உண்டு. தாம்பத்ய வாழ்க்கையில் ஜாதகரின் ஆளுமை அதிகம் இருக்கும். வாழ்க்கைத் துணை ஜாதகருக்கு கட்டுப்பட்டு இருப்பார். வாழ்க்கைத் துணையின் மரணத்தினால்  பிரிவு உண்டாகும்.

7--- 3, 6 & வாழ்க்கைத் துணையின் கள்ளத் தொடர்பு அல்லது 2வது திருமணம் இவைகளை முன்னிட்டு ஜாதகர் தனது வாழ்க்கைத் துணை மீது வழக்கு தொடுத்து, அவரிடமிருந்து பிரிந்து விடுவார். வாழ்க்கைத் துணைக்கு ஜீவனாம்சம் எதையும் ஜாதகர் தரமாட்டார்.

7--- 9, 12 & ஜாதகரின் கள்ளத்தொடர்பு அல்லது 2வது திருமணம் இவைகளை முன்னிட்டு வாழ்க்கைத் துணை ஜாதகர் மீது வழக்கு தொடுத்து அவரை விட்டு பிரிவார்.

7--- 7, 9 & ஜாதகர் ஒரே வீட்டில் இரண்டு மனைவியுடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் நிலை.

7--- 7, 10 & ஜாதகருக்கு அவரது வாழ்க்கைத் துணை மூலம் சொத்து கிடைக்கும். ஜாதகரின் வாழ்க்கைத் துணைக்கு மலட்டு தன்மையும் உண்டு.

7--- 7, 11 &  மணவாழ்க்கை கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். வாழ்க்கைத் துணைக்கு உடல் கவர்ச்சி அதிகம் உண்டு.

7--- 7, 8 & ஜாதகர் தனது வாழ்க்கைத் துணைக்கு சீதனத்தை அதிகம் (வரதட்சணை) அதிகம் தருவார். தனது பணத்தை வாழ்க்கைத் துணையிடம் கொடுத்து வைப்பார்.

7--- 4, 12 & தாம்பத்ய உறவுகளில் திருப்தி இன்மையால் ஜாதகரின் வாழ்க்கைத் துணை வழக்குகள் மூலம் ஜாதகரை பிரிதல். முதல் திருமணத்தின் மூலம் குழந்தை பாக்கியம் இல்லை எனவும் கூறலாம்.

7--- 3, 12 & வாழ்க்கைத் துணை தன்னுடைய கள்ளத்தொடர்புகளால் ஊரை விட்டு ஓடி போவதன் மூலம் உண்டாகும். விவாகரத்து அல்லது பிரிவினை அல்லது திருமணத்திற்கு பிறகு ஜாதகர் தன் சொத்துக்களை இழத்தல்.

7--- 3, 11 & மனமகிழ்ச்சியும், திருப்தியும் ஜாதகருக்கு தனது வாழ்க்கைத் துணை மூலம் கிடைக்கும். திருமணத்திற்கு முன் ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை பற்றி கற்பனைகளை வளர்த்து கொண்டிருப்பார்.

7--- 2, 11 & ஜாதகர் தனது வாழ்க்கைத் துணை மூலம் வரும் வருமானத்தினால் தனது சேமிப்பினை உயர்த்தி கொள்வார். வாழ்க்கைத் துணைக்கு மனக்கவலைகள் இருந்தாலும் ஜாதகருக்கு திருப்தியான மணவாழ்க்கை அமையும்.

7--- 2, 9 & ஜாதகரின் வாழ்க்கை மனநிலை பாதிக்கப்பட்ட நபராக இருப்பார். அதனால் ஜாதகர் தனது வாழ்க்கைத் துணையை ஒதுக்கி அல்லது வாழ்க்கைத் துணை இறந்த பிறகு மற்றவருடன் கள்ளத்தொடர்பு அல்லது இரண்டாவது திருமணம் செய்து கொள்வார்.

7--- 10, 6 & ஜாதகரின் வாழ்க்கைத் துணை குழந்தை பிறப்பிற்கு தகுதியில்லாதவர் என்பதால் திருமண உறவில் பிரிவு உண்டாகும். அல்லது வாழ்க்கைத் துணையை தனது தொழிலுக்கு ஜாதகர் பயன்படுத்தி கொள்வார்.

7--- 10, 8 & வாழ்க்கைத் துணையால் தொழிலில் நஷ்டம் உண்டாகுதல். தொழில் நடத்தும் அல்லது பணிபுரியும் இடத்திலேயே வாழ்க்கைத் துணை ஜாதகரை அவமானம் படுத்துவது மற்றும் ஜாதகர் இரண்டாவது திருமணம் செய்ய முடியாத நிலை.

மேற்கண்ட தொடர்புகள் போல் இன்னும் பல தொடர்புகள் 7ம் பாவம் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டு பெறும் போது அந்த அநத் பாவங்களின் காரகங்கள் செயல்படும். பாவத்தொடர்பு என்பதே ஒரு குறிப்பிட்ட பாவமுனை மற்ற பாவமுனைகளை தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் தொடர்பு கொள்கின்ற போது ஏற்படும் விளைவுகள் என்பதை வாசகர்கள் நன்கு அறிவீர்கள்.

இதில் நட்சத்திரம் சம்பவத்தை காட்டும், உப நட்சத்திரம் நட்சத்திரம் காட்டிய சம்பவத்திற்கு சாதகமான அல்லது பாதகமான அல்லது நடுநிலையான பலனை தரும். அதாவது இதை வேறுமாதிரியாக கூறினால் நட்சத்திரம் என்பது முதலில் நடைபெறும் சம்பவம் என்றும் உபநட்சத்திரம் அதற்கு பிறகு நடைபெறும் சம்பவம் என்றும் கூறலாம்.

உதாரணமாக 7ம் பாவ உபநட்சத்திர அதிபதியாக உள்ள கிரகம், தான் நின்ற நட்சத்திரம் வழியாக 6ம் பாவத்தையும், தான் நின்ற உபநட்சத்திரம் வாயிலாக 9ம் பாவத்தையும் தொடர்பு கொள்வதாக வைத்துக் கொள்வோம்.

நட்சத்திரம் 6ம் பாவத்தை காட்டுவதால் இது ஜாதகர் தன் வாழ்க்கைத் துணையை விவாரகரத்து மூலம் பிரிவதையும், உப நட்சத்திரம் 9ம் பாவத்தை காட்டுவதால் விவாகரத்திற்கு பிறகு ஜாதகர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதையும் குறிக்கும்.

இங்கு நட்சத்திரம் காட்டிய 6ம் பாவத்திற்கு, உபநட்சத்திரம் காட்டிய 9ம் பாவம், 4ம் பாவமாக வருவதால் நட்சத்திரம் காட்டிய பாவபலனை உபநட்சத்திரம் 30% வரை இயங்க அனுமதித்து, பிறகு நட்சத்திரத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி விடும்.

அதாவது 6ம் பாவம் என்பது ஜாதகர் விவாகரத்து பெற்று தனிமை வாழ்க்கை வாழ்ந்த சிறிது காலத்திற்கு பிறகு (3ல் 1 பங்கு), ஜாதகர் 2வது திருமணத்தை செய்து கொள்வதை குறிக்கின்றது.

இதற்கு மாறாக நட்சத்திரம் 9ம் பாவத்தை காட்டி, உபநட்சத்திரம் 6ம் பாவத்தை காட்டினால் முதலில் ஜாதகருக்கு கள்ளத்தொடர்புகள் உண்டாகி, இதனால் பிறகு தன்னுடைய வாழ்க்கைத் துணை (முதல்)யிடமிருந்து விவாகரத்து பெறுவார்.

இங்கு நட்சத்திரம் காட்டிய 9ம் பாவத்திற்கு உபநட்சத்திரம் காட்டிய 6ம் பாவம், 10 பாவமாக வருவதால் நட்சத்திரம் காட்டிய பாவ பலனை உபநட்சத்திரம் 70% வரை இயங்க அனுமதி தந்து பிறகு நட்சத்திரத்தின் இயக்கத்தை தடுத்து நிறுத்தி விடும்.

அதாவது ஜாதகர் 9ம் பாவம் என்ற கள்ளத்தொடர்பினை நீண்டகாலம் வைத்திருத்திருந்த பிறகு (70%), ஜாதகரின் மனைவி () கணவன் பொறுத்திருந்து பார்த்து விட்டு அவரை விட்டு விவாகரத்து பெறுவதை குறிக்கும்.

அதேபோல் 7ம் பாவ உபநட்சத்திர அதிபதி (அல்லது நட்சத்திர அதிபதி, உப உப நட்சத்திர அதிபதி) இரண்டிற்கு மேற்பட்ட பாவங்களுடன் தொடர்பு கொள்ளும் போது அந்த அந்த பாவங்களின் காரக தன்மைகளின் கூட்டு தன்மைகளே 7ம் பாவ விதியாக அல்லது கொடுப்பினையாக அமைகின்றது.

இதுவரை பாவகாரகம் என்ற ஒன்றை மட்டும் வைத்து பலன் கூறும் முறையை பார்த்தோம். அதே போல் கிரக காரகம், கால புருஷ தத்துவம் போன்றவற்றை பாவமுனைகளுடன் இணைத்து, ஒருவரின் திருமண வாழ்க்கை பற்றின விதிகொடுப்பினையைமேலும் பன்முகத் தன்மை கொண்டு பலனை நிர்ணயம் செய்யலாம்.

அதாவது கணவன் அல்லது மனைவியின் குணம், தோற்றம், தாம்பத்ய உறவு போன்ற பன்முக தன்மையுடன் தெளிவான விளக்கங்களை கிரக காரகங்கள், கால புருஷ தத்துவம் போன்வற்றின் மூலம் அறியலாம். உதாரணமாக 7ம் பாவ உபநட்சத்திரமாக (அல்லது நட்சத்திரமாக, உப உப நட்சத்திரமாக) அமைந்தால் ஏற்படும் விளைவுகளை பொதுவான நிலையில் குறிப்பிடுகின்றேன்.

சூரியன்:&

ஜாதகரின் வாழ்க்கைத் துணை நல்ல நிர்வாக திறமையை பெற்றிருப்பார். கம்பீரமான தோற்றத்தை பெற்றிருப்பார். வாழ்க்கை துணைக்கு அரசாங்க தொடர்புகள் இருக்கும்.

சூரியன் 9, 2, 6ம் பாவத் தொடர்பினை பெற்றால் வாழ்க்கைத் துணைக்கு எலும்புகளில் நோய், உஷ்ண நோய், தாழ்வு மனப்பான்மை, நிர்வாக திறமையின்மை, மற்றவருக்கு கட்டுப்படுதல் போன்ற பலன்கள் உண்டாகும்.

சூரியன் 8, 12ம் பாவத் தொடர்பினை பெற்றால் வாழ்க்கை துணைக்கு ஆணவம் மற்றும் சுய நல போக்கு அதிகரித்தும், ஜாதகரின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தும் நன்றாக இருப்பார். அதாவது ஒவ்வொரு கிரகத்தின் காரகங்களை வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். ஒவ்வொரு கிரகமும், தான் தொடர்பு கொண்ட பாவங்களுக்கு ஏற்ப தன்னுடைய கிரக காரகத்தை செயல்படுத்தும்.

ஒரு கிரகம் லக்னத்திற்கு சாதகமான பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த கிரகத்தின் நல்ல காரகங்களை (ஜாதகரின் உடல், மனத்திற்கு தீமையை தராத காரகங்களை) ஜாதகர் அனுபவிப்பார்.

ஒரு கிரகம் லக்னத்திற்கு பாதகமான பாவங்களை தொடர்பு கொண்டால் அந்த கிரகத்தின் கெட்ட காரகங்களை ஜாதகர் அனுபவிப்பார்.

இதுவரை 7ம் பாவ ஆரம்பமுனையின் உபநட்சத்திர அதிபதி (அல்லது நட்சத்திர அதிபதி, உப உப நட்சத்திர அதிபதி) தான் நின்ற நட்சத்திரம், உபநட்சத்திரம் மூலம் கொள்ளும் தொடர்பகளினால் ஏற்படும் விளைவுகள் ஜாதகருக்கு அவரின் வாழ்க்கைத் துணைக்கும் எப்படி இருக்கும் எனப் பார்த்தோம். இவைகள் அனைத்தும் ஜாதகரின் திருமண வாழ்க்கைக்கு உண்டான விதி அல்லது கொடுப்பினை எனப்படுகின்றது.

அதே போல் ஒருவருடைய திருமணம் எந்த மாதிரியான முறையில் நடைபெறும் என்பதையும், எந்த மாதிரியான நபர் வாழ்க்கைத் துணையாக ஜாதகருக்கு அமைவார் என்பதையும் இனி பார்ப்போம்.

எந்த எந்த பாவ ஆரம்ப முனைகள் தாங்கள் நின்ற நட்சத்திரம்உப நட்சத்திரம் மூலம் 7ம் பாவ முனையின் உபநட்சத்திர அதிபதியை (அல்லது 7ம் பாவமுனையின் நட்சத்திர அதிபதி, உப உப நட்சத்திர அதிபதி) தொடர்பு கொண்டிருக்கின்றதோ அதன் பாவ காரகங்களின் ரீதீயாக திருமணம் அல்லது வாழ்க்கைத் துணை அமையும்.

அதாவது 7ம் பாவ ஆரம்பமுனையின் உபநட்சத்திர அதிபதி தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் மற்ற பாவங்களை தொடர்பு கொண்டு, தனது பாவ காரக ரீதியில் தொடர்பு கொண்ட மற்ற பாவங்களின் காரகங்களை இயக்கும் அல்லது செயல்படுத்தும் என்பைத இதற்கு முன் பார்த்தோம்.

அதே போல் மற்ற பாவமுனைகளின் உபநட்சத்திர அதிபதிகள் (அல்லது நட்சத்திர அதிபதி, உப உப நட்சத்திர அதிபதி) தாங்கள் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் மூலம் 7ம் பாவமுனையை தொடர்பு கொண்டால் (குறிப்பாக 7ம் பாவ உபநட்சத்திர அதிபதியை) தனது பாவத்தின் ரீதியாக 7ம் பாவத்தை செயல்படுத்தும்.

அந்த வகையில் பின்வரும் பாவங்களின் ஆரம்பமுனையின் உபநட்சத்திர அதிபதி, தான் நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் வாயிலாக 7ம் பாவ ஆரம்பமுனையுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் விளைவுகள் கீழ்கண்டவாறு அமையும்.

1ம் பாவம்:-& நன்கு அறிமுகமான நபரை திருமணம் செய்து கொள்வது மற்றும் பணத்தை முக்கியமாக கருதாமல் பாரம்பரியம், கௌரவத்தை கருத்தில் கொண்டு திருமணம் அமைவது.

2ம் பாவம்:-& தனது குடும்பத்தில் உள்ள ஒருவரையே திருமணம் செய்து கொள்வது அல்லது அதிகமாக பணம் கொடுத்து (வரதட்சணை) திருமணம் செய்வது.

3ம் பாவம்:-& பக்கத்து ஊர், அருகாமையில் உள்ளவரையோ அல்லது விளம்பரங்கள் மூலமாகவோ (திருமண தகவல் மையம்) திருமணம் செய்து கொள்வது.

4ம் பாவம்:-& சொந்த ஊரில் அல்லது உறவுமுறையில் (குறிப்பாக தாய் வழியில்) உள்ள நபரை அல்லது சொத்துகள் கொடுத்து (மணக்க போகும் நபருக்கு) அல்லது சொத்துக்கள் மற்றவருக்கு கைவிட்டு போகக்கூடாது என்பதற்காக திருமணம் செய்து கொள்வது.

5ம் பாவம்:-& காதல் திருமணமாக அமையும்.

6ம் பாவம்:-& உடன் பணிபுரியும் நபரை அல்லது தனது தகுதிக்கு குறைந்த நபரை (வேலைக்காரர்கள்) திருமணம் செய்து கொள்வது.

7ம் பாவம்:-& தனக்கு சமமான நபரை அல்லது சட்டப்பூர்வமான முறையில் (பதிவு திருமணம்) திருமணம் செய்து கொள்வது.

8ம் பாவம்:-& கட்டாயத்தின் அல்லது நிர்ப்பந்தத்தின் பேரில் நடைபெறும் திருமணம் அல்லது எதிர்பாராத முறையில் நடக்கும் திடீர் திருமணமாக அமையும்.

9ம் பாவம்:-& அன்னிய இனம், மதம், வெளிநாடு, நீண்ட தொலைவில் உள்ளவரை திருமணம் செய்வது அல்லது தகப்பனார் வழியில் அல்லது சட்டப்பூர்வமான முறையில் இரண்டாம் திருமணம் செய்து கொள்வது.

10ம் பாவம்:-& வேலை பார்க்குமிடத்திலுள்ள வரை அல்லது தான் செய்கின்ற தொழிலையே செய்கின்ற நபரை திருமணம் செய்து கொள்ளும்.

11ம் பாவம்:-& ஜாதகர் விரும்பும் நபரை அல்லது நண்பர்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்ளுதல் அல்லது நண்பர் மூலம் திருமணம் அமையும்.

12ம் பாவம்:-& யாரையும் அழைக்காமல் ரகசியமாகத் திருமணம் செய்து கொள்ளுதல் அல்லது வெளிநாட்டில் உள்ள நபரை திருமணம் செய்து கொள்ளுதல்.

மேற்கண்ட புத்தகத்தை பெற Call: 9382339084 

புத்தகத்தின் விலை ரூ 200/- 

Google pay No : 9445721793


For more Details:


1.  Website https://www.astrodevaraj.com/ 

2.  you tube channel  https://www.youtube.com/user/astrodevaraj

3. Face Book Link https://www.facebook.com/groups/stell ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக